வளசரவாக்கம்: காரம்பாக்கத்தில், பூட்டிய வீட்டில், மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின.காரம்பாக்கம், ராஜேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் கணேஷ் பாபு, 42; தனியார் நிறுவன ஊழியர். இவர், இரு தினங்களுக்கு முன், வீட்டை பூட்டி, குடும்பத்துடன் சதுரகிரி சென்றார்.நேற்று காலை, அவரது வீட்டில் இருந்து கரும்புகை வந்தது. அக்கம்பக்கத்தினர், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.அசோக் நகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர். விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. விபத்து குறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர். தீ விபத்து நடந்த வீட்டை, ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE