அருப்புக்கோட்டை:விபத்தில் மூட்டு எலும்புகள் நொறுங்கிய நிலையில் அறுவை சிகிச்சையின்றி நவீன கருவி மூலம், எலும்புகளை ஒரு மணி நேரத்தில் ஒட்டவைத்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புளியம்பட்டி பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி அய்யாத்துரை 34. பத்து நாட்கள் முன்பு கோவில்பட்டியில் கட்டட பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி விழுந்ததில் வலது தோள்பட்டை, மூட்டு பகுதி எலும்புகள் நொறுங்கின. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட இவர் 4 நாட்களுக்கு முன்பு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இங்குள்ள நவீன கருவி மூலம் அவரது உடைந்த எலும்புகளை ஒட்ட டாக்டர்கள் முடிவு செய்தனர். மருத்துவ அதிகாரி டாக்டர் வடிவேல் ஆலோசனையின்படி டாக்டர்கள் அருணாச்சலம், சோமமூர்த்தி நாகராஜன் ஆகியோர் சி-ஏ.ஆர்.எம்.,' கருவி மூலம் நொறுங்கிய மூட்டு எலும்புகளை ஒட்ட வைத்தனர். அறுவை சிகிச்சையின்றி 1 மணி நேரத்தில் சிகிச்சை முடிக்கப்பட்டது. டாக்டர்கள குழுவினரை டாக்டர்கள் சந்திரமவுலி, காமாட்சி பாண்டியன் மற்றும் செவிலியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE