மதுரை:ரயில்வே கேட்டுகளில் எட்டு மணி நேரம் பணியை நடைமுறைப்படுத்தாததை கண்டித்து மதுரையில் கேட் கீப்பர்கள் ஒட்டுமொத்த மருந்து விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில்கள் போக்குவரத்து அதிகம் மிகுந்த லைன்களில் கேட்கீப்பர்களுக்கு 12 மணி நேர பணியை 8 மணி நேரமாக குறைக்கலாம் என கோட்ட ஊழியர் நல அலுவலகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டது. மதுரை - துாத்துக்குடி ரயில்வே லைனில் ரயில்கள் போக்குவரத்து
அதிகம். இந்த லைனில் எட்டு மணி நேர பணியை நடைமுறைப்படுத்தாததை கண்டித்து
கேட்கீப்பர்கள் ஒட்டுமொத்த மருத்துவ விடுப்பு எடுத்தனர்.
அனைவரும் உடல்நலம் பாதிப்பு எனக்கூறி சிகிச்சை பெற மதுரை ரயில்வே மருத்துவமனையில் திரண்டனர். அவர்களுக்கு சிகிச்சையளிக்க டாக்டர்கள் மறுத்தனர். இதனால்
அங்கு தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.மஸ்துார் யூனியன் கோட்ட செயலாளர் ரபீக், தலைவர் ரவிச்சந்திரன், உதவி செயலாளர்கள் ராம்குமார், சீதாராமன், சுந்தர்கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின் கோரிக்கையை ஒரு வாரத்தில் நிறைவேற்றுவதாக
அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE