உடுமலை:மாநில அளவில் நடந்த அறிவியல் திறனறித்தேர்வில், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து இரண்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையுடன், என்.சி.இ.ஆர்.டி., மற்றும் 'விபா' அமைப்பும் இணைந்து, பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அறிவியல் திறனறித் தேர்வு நடத்துகின்றனர்.கொரோனா பாதிப்பு காரணமாக, தேர்வை, மாணவர்கள் வீட்டிலிருந்தே 'ஆன்லைனில்' எழுதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தேர்வு, நவ., 29 மற்றும் 30ம் தேதிகளில் நடந்தது.
மாநில அளவில், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.இதில், ஆறு முதல், பிளஸ் 1 வரை, 126 மாணவர்கள் இரண்டாம் கட்ட தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர், சைதன்யா மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மவுனீஸ்வரன், விரிக்ஷா பள்ளியைச் சேர்ந்த கோபிகுரு ரித்துாஷ் ஆகியோர் அடங்குவர்.பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்குமான சான்றிதழ்கள், அனுப்பப்பட்டுள்ளதாக, வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் மாநில ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE