கோவை,:''காலவரையற்ற லாரி வேலைநிறுத்தம், திட்டமிட்டபடி, டிச., 27 முதல் துவங்கும்,'' என, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமரேசன் தெரிவித்தார்.
கோவையில் குமரேசன் நிருபர்களிடம் கூறியதாவது:தென் இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் நல சங்கம், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில், காலவரையற்ற லாரி வேலைநிறுத்தம், திட்டமிட்டபடி, டிச., 27 முதல் துவங்கும். கோரிக்கையை ஏற்கும் வரை போராட்டம் தொடரும்.
கொரோனா காலத்துக்கான காலாண்டு வரியை தள்ளுபடி செய்தல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தல், ஆன்லைன் அபராதம் ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி, போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE