மதுரை : “பள்ளிகளில் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்,” என மதுரையில் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தெரிவித்தார்.
மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மத்திய அரசு திட்டத்தில் உள்ள அடல் டிங்கரிங் ஆய்வகங்களின் பொறுப்பாளர், ஆசிரியர்களுக்கான பயிற்சி கண்காட்சி மைக்கேல் பள்ளியில் நடந்தது. நுாறு ஆசிரியர்கள், 12 புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய மதுரை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களை சேர்ந்த 24 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதை துவக்கி முதன்மை கல்வி அலுவலர் பேசுகையில், “மாணவர்களின் அறிவியல் ஆர்வம் மற்றும் ஆராய்ச்சி திறனை மேம்படுத்தும் ரோபோட்டிக் மற்றும் செயற்கை நுண்ணறிவை ஊக்குவிக்கும் நவீன உபகரணங்கள் இந்த ஆய்வகங்களில் உள்ளன,” என்றார்.
சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. டி.இ.ஓ.,க்கள் முத்தையா வளர்மதி, பங்கஜம், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம், துணை ஆய்வாளர் வெங்கட்ராமன், பள்ளி தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், தாளாளர் பிரிஸிட் நிர்மலா, முதல்வர் மதிவதனன் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE