ஈரோடு: ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக, தன்னார்வ பயிலும் வட்டம் மூலம், போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. கொரோனா பரவலால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், ஒருங்கிணைந்த டி.என்.பி.எஸ்.சி., - டி.என்.யூ.எஸ்.ஆர்.பி., போட்டி தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட, எஸ்.பி.ஐ., புரேபேஷனரி ஆபீஸர் பணிக்கு, 2,000 காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இப்பணிக்கான தேர்வு வரும், 31, ஜன., 2, 4, 5ல் நடக்கிறது. இதற்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. விருப்பம் உள்ள மாணவர்கள் vgerode2020@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் அல்லது நேரில் வந்து பதிவு செய்து, பயிற்சியில் பங்கேற்கலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE