ஈரோடு: வீரப்பன் சத்திரம், மாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவது குறித்து, இரண்டாம் கட்ட கருத்து கேட்பு கூட்டம் இன்று நடக்கிறது. ஈரோடு, வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் திருவிழா, வரும், 22ல் துவங்க உள்ளது. விழா நடத்துவது குறித்த, கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நேற்று நடந்தது. அதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதில், தளர்வு கேட்டதால் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில், இரண்டாம் கட்ட கருத்து கேட்பு கூட்டம், ஆர்.டி.ஓ., சைபுதீன் தலைமையில் இன்று நடக்கிறது. விழா கமிட்டியினர், அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பூசாரிகள் கூட்டத்தில் தங்கள் கருத்தை தெரிவிப்பர். இன்று, உடன்பாடு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE