ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை, 13 ஆயிரத்து, 127 பேர் கொரோனாவால் பாதித்திருந்தனர். நேற்று புதிதாக, 53 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 13 ஆயிரத்து, 180 என உயர்ந்தது. நேற்று, 49 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, 12 ஆயிரத்து, 686 என அதிகரித்துள்ளது. கடந்த, 10 நாட்களுக்கு மேலாக கொரோனாவால் இறப்பு இல்லாததால், இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை, 142 என, தொடர்கிறது. கொரோனா பாதித்தவர்களில், 348 பேர் மட்டும் சிகிச்சையை தொடர்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE