ஈரோடு: ஈரோடு, அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே, அகில இந்திய விவசாயிகள் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் முனுசாமி தலைமையில், நேற்று மூன்றாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள, மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்தல், மின் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறுதல், டில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டில்லியில் போராட்டம் நிறைவடையும் வரை, காத்திருப்பு போராட்டம் தொடரும் என, வலியுறுத்தி மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தில் விவசாயிகள், கட்சியினர் ஈடுபட்டனர். நேற்று எம்.பி., கணேசமூர்த்தி, தி.மு.க., மாவட்ட செயலாளர் முத்துசாமி, மாநகர மாவட்ட காங்., தலைவர் ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ரகுராமன், போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் துளசிமணி, சுப்பு, பொன்னையன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE