பவானி: பவானி அருகே, குருப்பநாயக்கன்பாளையம் பஞ்., அலுவலக வளாகத்தில், 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில், பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், குருப்பநாயக்கன்பாளையம் பஞ்.,ல், சட்டப்படி பதிவு செய்து, ஜாப் கார்டு வைத்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும், 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள தினக்கூலி, 256 ரூபாய் உறுதிப்படுத்தி வழங்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை, சம்பளம் வழங்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE