சேலம்: விவசாய போராட்டத்துக்கு ஆதரவாக, சாலை மறியலில் ஈடுபட்ட, 70 பேர் கைது செய்யப்பட்டனர். வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர், சேலம், கலெக்டர் அலுவலகத்தில், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் ராமமூர்த்தி தலைமையில், காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. முன்னாள் எம்.எல்.ஏ., டில்லிபாபு பங்கேற்றார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கிருந்த போலீசார், 70 பேரை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE