சேலம்: சேலம் மாவட்டத்தில், நேற்று, 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி, சேலம் மாநகராட்சியில், 23 பேர், மேட்டூர், 4, சங்ககிரி, அயோத்தியாப்பட்டணத்தில் தலா, 3, மகுடஞ்சாவடி, ஓமலூர், வீரபாண்டி, ஆத்தூரில் தலா, 2, இடைப்பாடி, காடையாம்பட்டி, மேச்சேரி, சேலம் ஒன்றியம், தாரமங்கலம், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடியில் தலா ஒருவர் என, மாவட்டத்தில், 48 பேர், நாமக்கல்லிலிருந்து வந்த ஒருவர் என, சேலத்தில், 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், சேலத்தை சேர்ந்த, 62 வயது முதியவர், சேலம் அரசு மருத்துவ மனையில் உயிரிழந்தார்.
ஜி.ஹெச்.,ல் முதல்முறை: மேட்டூர், சதுரங்காடியை சேர்ந்த, 60 வயது முதியவர், அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த, 10ல், மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 11ல், அவரது, 47 வயது மனைவி, 21 வயது மகள், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று, முதியவர் உயிரிழந்தார். கொரோனாவால் ஒருவர் இறந்தது, மேட்டூர் அரசு மருத்துவமனையில் முதல்முறை என, மருத்துவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE