காரிமங்கலம்: காரிமங்கலத்தில், மொரப்பூர் செல்லும் சாலையில், உயர்மின் கோபுரவிளக்கு அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரிமங்கலத்திலிருந்து, மொரப்பூர் செல்லும் சாலையில், நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலை, மோட்டூர், தாதன்கொட்டாய் ஆஞ்சநேயர் கோவில் வழியாக, மொரப்பூர் செல்கிறது. இக்கோவில் அருகே செல்லும் சாலை வனப்பகுதியாகவும், மிகவும் வளைவாகவும் உள்ளது. இதனால், எதிரே வரும் வாகனங்கள் மறுதிசையில் வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால், வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். மேலும், இப்பகுதியில் மின்விளக்கு மற்றும் உயர்மின் கோபுர விளக்கு இல்லாததால், இரவில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த கோவில் அருகே, உயர் மின்கோபுர விளக்கு அமைக்க வேண்டும். மேலும், இந்த வளைவு சாலையில், எச்சரிக்கை பலகை, பிரதிபலிக்கும் பட்டைகள் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE