பள்ளிபாளையம்: ஒன்பதாம்படி விபத்து பகுதியில் மீண்டும் பேரிகார்டு வைக்க, நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிபாளையம் பாலம் சாலையில் ஒன்பதாம்படி பகுதியில் குடியிருப்பு பகுதியிலிருந்து வரும் மற்றொரு சாலை இணைகிறது. இதனால் இந்த இடத்தில் வாகன ஓட்டிகள் கவனமாகவும், எச்சரிக்கையுடன் வர வேண்டும். இல்லையெனில் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படும். அதற்கு காரணம், இது பிரதான சாலை என்பதால், வாகனங்கள் தொடர்ச்சியாக வேகமாக வருவது. மேலும் சாலையை கடந்து செல்லும் போது அதிக கவனம் தேவை. அடிக்கடி விபத்து ஏற்பட்டதால், இங்கு சாலையின் குறுக்கே பேரிகார்டு வைக்கப்பட்டது. இது வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்தி மெதுவாக செல்ல உதவியது. தற்போது இங்கு பேரிகார்டு இல்லாததால், வாகன ஓட்டிகளும், மக்களும் மிகவும் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் வயதானவர்கள் டூ வீலரில் வரும் போது பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். விபத்தில் சிக்குகின்றனர். மீண்டும் பேரிகார்டு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE