கிருஷ்ணராயபுரம்: குள்ளம்பட்டி கிராமத்தில், கொரோனா சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. டாக்டர் அன்புச்செல்வன் தலைமை வகித்தார். இதில், மக்களுக்கு கொரோனா மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. முக கவசம் அணிந்து இருந்தல், சமூக இடைவெளி பின்பற்றுதல், பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் உடல் வெப்பநிலை அறிதல், சர்க்கரை நோய் கண்டறிதல், ரத்தஅழுத்த நோய் ஆகிய பரிசோதனை நடந்தது. மக்களுக்கு கபசுர குடிநீர், சத்துமாத்திரைகள் வழங்கப்பட்டன. சுகாதார பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE