கரூர்: கரூரில், மேலும், 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று, மாவட்டத்தில், 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பலர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். தொற்றில் இருந்து குணமடைந்த, 19 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, மாவட்டத்தில் மொத்தம், 5,012 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 4,866 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.மேலும், 48 பேர் தொற்றால் இறந்துள்ளனர். தற்போது, 98 பேர் தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE