கரூர்: கரூர், பஸ் ஸ்டாண்ட் மனோகரா கார்னரில், தி.மு.க., சார்பில், 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான செந்தில் பாலாஜி தலைமை வகித்தார். தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில் இரண்டு, தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்கள் மற்றும், காங்.,- எம்பி., ஜோதிமணி ஆகியோருக்கு, முதல்வர் பழனிசாமி ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள எந்தவிதமான அழைப்பும் வரவில்லை. இதனால், கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. புது பஸ் ஸ்டாண்ட், சுற்று வட்டச் சாலை, அமராவதி ஆற்றில் கோயம்பள்ளியில் உயர்மட்ட பாலம் ஆகிய பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. நீதிமன்றம் உத்தரவிட்டும், பஸ் ஸ்டாண்ட் பணி தொடங்கவில்லை. அரசு மருத்துவமனைகளில் போதிய உயிர் காக்கும் மருத்துவ உபகரணம் இல்லை. வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE