புதுடில்லி:டாக்டர் கபீல் கானை விடுவித்து, அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கோரக்பூர் அரசு மருத்துவமனையில், குழந்தைகள் நல டாக்டராக பணியாற்றி வந்தவர் கபீல் கான்.
போராட்டம்
இவர், இந்த ஆண்டு துவக்கத்தில், அலிகார் முஸ்லிம் பல்கலையில் நடந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று, அந்த சட்டத்தை கடுமையாக விமர்சித்தார். வன்முறையை துாண்டும் வகையில் பேசியதாக, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், கபீல் கான் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், கபீல் கானின் தாய் முறையிட்டார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கபீல் கான் மீது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து, அவரை விடுதலை செய்தது.உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உ.பி., மாநில அரசு, உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.
எனினும்,அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட,உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.'சஸ்பெண்ட்''இந்த வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம், நல்ல தீர்ப்பை வழங்கியது. எனவே, இதில் நாங்கள் தலையிடமாட்டோம்' என, அமர்வு உத்தர விட்டது.கடந்த, 2017ல், கோரக்பூர் அரசு மருத்துவமனையில், 'ஆக்சிஜன் சிலிண்டர்' பற்றாக்குறையால், ஏராளமான குழந்தைகள் இறந்தன. இதில், கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டவர் கபீல் கான்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE