திருப்பூர்:மங்களூரில் இருந்தவர் மீது, திருப்பூரில் 'ஹெல்மெட்' அணியாமல் வாகனம் ஓட்டியதாக போலீசார் அபராதம் விதித்தனர்.திருப்பூர், பி.என்., ரோடு திருமலை நகரை சேர்ந்தவர் பூபதி, 34. இவர் கடந்த, 12ம் தேதி தனது டூவீலரை பழுது நீக்க ஒர்க் ஷாப்பில் ஒப்படைத்தார். அன்றிரவு, திருப்பூரில் இருந்து ரயில் மூலமாக ஆன்மீக சுற்றுலாவுக்காக மங்களூர் சென்றார்.மங்களூரில் இருந்த பூபதியின் மொபைல் போனுக்கு போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக எஸ்.எம்.எஸ்., சென்றது. இதுகுறித்து அவர் விசாரித்தார். தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், 'ஹெல்மெட்' அணியாமல் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக, 200 ரூபாய் அபராதம் விதித்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக பூபதி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE