திருப்பூர்:திருப்பூரில், கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை, தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.திருப்பூர், தாராபுரம் ரோடு, தில்லை நகரை சேர்ந்தவர் முத்துலட்சுமி, 53. இவர் நேற்று வீட்டு காம்பவுண்டில் உள்ள கிணற்றின் அருகே துணி காய வைக்க முயற்சி செய்தார். அப்போது, எதிர்பாராத விதமாக, 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தார். அதில், 30 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்தது.அவரின் சத்தம் கேட்டு, அருகிலிருந்தோர், தெற்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான வீரர்கள், தில்லை நகருக்கு சென்றனர்.குறுகிய கிணற்றுக்குள் கயிற்றின் மூலமாக, தீயணைப்பு வீரர் அன்பரசு உள்ளே இறங்கி, முத்துலட்சுமியை பத்திரமாக மீட்டார். இது குறித்து தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE