திருப்பூர்:திருப்பூரில், சுற்றித்திரிந்த, ஏழு குழந்தைகளை போலீசார் மீட்டனர்.திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சுற்றித்திரியும் குழந்தைகளை, குழந்தைகள் நல குழுவினர் மீட்டு வருகின்றனர். அதன்படி, எஸ்.ஐ., கள் கலாவதி, சந்திரமோகன் உட்பட போலீசார் ரோந்து சென்றனர். அதில், ஏழு குழந்தைகள் மீட்கப்பட்டு, குழந்தைகள் நல குழு அலுவலர் பிரேமலதா, கண்ணன், சவுந்தரநாயகி முன்னிலையில் ஆஜர்படுத்தி, மரியாலாயா காப்பகத்தில் சேர்த்தனர்.இதேபோல, 25 குழந்தை தொழிலாளர் மீட்கப்பட்டு, அவர்களின் பெற்றோரை வரவழைத்து, அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE