ராமநாதபுரம் : முதுகுளத்துார், கடலாடி, மண்டபம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடக்கையை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
முதுகுளத்துார் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் காளிமுத்து தலைமை வகித்தார். செயலாளர் பிரிட்டோவும் ,கடலாடியில் வட்டார தலைவர் அருள் தலைமை வகித்தார். செயலாளர் முருகானந்தம், பொருளாளர் வளன்பாஸ்கல் மற்றும் மண்டபம், கமுதி ஆகிய இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.-------
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE