ராமநாதபுரம் : ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தேங்கும் கழிவுநீரால் நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளதால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து மதுரை, துாத்துக்குடி, கும்பகோணம், புதுக்கோட்டை உட்பட வெளிமாவட்டங்கள், உள்ளூர் பகுதிகளுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் இலவச கழிப்பிடம் வசதி இல்லை, சிறுநீர் கழிப்பிடம் பெயரளவில் உள்ளது. நவீன கட்டண கழிப்பிடங்கள் செயல்படுகின்றன.
இதனால் பஸ் நிறுத்தும் மறைவிடங்கள், சாக்கடை கால்வாய்களை திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடமாக மாறியுள்ளன. சிறிய மழைபெய்தால் கூட கழிவுநீர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் குளம்போல தேங்கிவிடுகிறது.துர்நாற்றத்தினால் நோய்தொற்று பரவ வாய்ப்புள்ளது. ஆகையால் கழிவுநீரை அகற்றுவதோடு, தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE