திருப்பூர்:மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்கு, சிறப்பு ரயில்கள் இயக்க அறிவிப்பு இல்லாததால், பெண் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆண்டுதோறும், டிச., ஜனவரி மாதங்களில், பக்தர்கள் சக்தி மாலை அணிந்து, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்வர். இதற்காக, மாநிலத்தின் பல பகுதியில் இருந்தும், சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மேல்மருவத்துாரை கடந்து செல்லும் விரைவு ரயில்களும், ஒரு நிமிடம் அங்கு நிறுத்தப்படும்.
கடந்தாண்டு, 22 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.'நாகர்கோவில், மதுரை, செங்கோட்டையில் இருந்து, விழுப்புரம் வழியாக சென்னைக்கு இயக்கப்படும் ரயில்கள், மேல்மருவத்துாரில் நின்று செல்லும்' என, சில தினங்களுக்கு முன், தெற்கு ரயில்வே அறிவித்தது.
தற்போது, கோவையில் இருந்து விழுப்புரம், செங்கல்பட்டுக்கு ரயில் இல்லை.கோவை, திருப்பூர், ஈரோட்டில் இருந்து, மேல்மருவத்துாருக்கு ரயிலில் செல்லும் பெண் பக்தர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 'எனவே, கடந்தாண்டுகளை போலவே, மேல்மருவத்துாருக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE