ராமநாதபுரம் : ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.
கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு நடவடிக் கையால் தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகள் கடந்த மார்ச் 26 முதல் மூடப்பட்டது. டிச.,5 முதல் கல்லுாரிகளில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடக்கிறது. ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லுாரியில் குடிநீர், கழிப்பறையில் தண்ணீர் இல்லை உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மூன்றாம் ஆண்டு மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். அவர்களிடம் டி.எஸ்.பி., வெள்ளத்துரை, கல்லுாரி நிர்வாகத்திடம் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என கூறினார். இதனையடுத்து மாணவர்கள் கலைந்துசென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE