மேட்டுப்பாளையம்:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ள, இலவச வேட்டி, சேலைகள், மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்துள்ளன.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு இலவசமாக வேட்டி, சேலை மற்றும் பரிசு பொருட்களை, தமிழக அரசு வழங்குகிறது. வரும் பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலைகள், மக்களுக்கு வழங்க, முதற்கட்டமாக தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன.மேட்டுப்பாளையம் தாசில்தார் சாந்தாமணி கூறுகையில், ''மேட்டுப்பாளையம் தாலுகாவில், 57 முழு நேர ரேஷன் கடைகளும், 61 பகுதி நேர ரேஷன் கடைகளும் செயல்படுகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதற்கட்டமாக, 27 ஆயிரம் வேட்டி, சேலைகள் வந்துள்ளன. இன்னும் வரவேண்டியுள்ளது. அனைத்தும் வந்த பின், அரசு அறிவிக்கும் தேதிகளில், பொதுமக்களுக்கு வழங்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE