பெ.நா.பாளையம்:சின்னதடாகத்தில், மா.கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை குறைக்க, மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, சின்னதடாகம் பஸ் நிறுத்தத்தில், மா. கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் பாலமூர்த்தி தலைமை வகித்தார்.மாவட்ட குழு உறுப்பினர் கேசவமணி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பழனிசாமி, ரவிக்குமார், தடாகம் ஊராட்சி மன்ற உறுப்பினர் சவுந்தரராஜன் உட்பட, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE