சூலுார்:ஏழை, எளிய மக்கள் மருத்துவ வசதி பெற, சூலுார் ஒன்றியத்தில், ஆறு இடங்களில் 'அம்மா' மினி கிளினிக்குகள் திறக்கப்பட உள்ளன.ஆரம்ப சுகாதார நிலையங்கள் அருகில் இல்லாத பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உடனடியாக, எளிதில் மருந்துவ உதவிகள் கிடைத்திட, 'அம்மா' மினி கிளினிக்குகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. சாதாரண காய்ச்சல், காயங்கள் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு அந்தந்த பகுதியிலே திறக்கப்படும் 'அம்மா' கிளினிக்கில் சிகிச்சை பெறலாம்.கிளினிக்கில் ஒரு டாக்டர், ஒரு நர்ஸ் மற்றும் ஒரு உதவியாளர் பணியில் இருப்பர் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இடங்கள் தேர்வு செய்யும் பணி ஒவ்வொரு ஒன்றியத்திலும் நடக்கிறது.சூலுார் ஒன்றியத்தில், குரும்பபாளையம், பீடம்பள்ளி, சின்னியம்பாளையம், பதுவம்பள்ளி, கண்ணம்பாளையம், செம்மாண்டாம்பாளையம் உட்பட ஆறு இடங்களில் மினி கிளினிக்குகள் அமைய உள்ளன. முதற்கட்டமாக, குரும்பபாளையம், பீடம்பள்ளி கிளினிக்குகள் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE