சிவகங்கை : சிவகங்கை அருகே ஒக்கூரில் மழை நீர் வடிகால் இல்லாததால் வீடுகளுக்கு அருகே தேங்கியுள்ளமழை நீரால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஒக்கூர் பகுதியில் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.சாலையின் குறுக்கே இருந்த மழை நீர் வடிகால் பாலம் மூடப்பட்டு விட்டது. இதன் காரணமாக மழை நீர் வடியாமல்ஆசிரியர்கள் குடியிருப்பு தெருக்களில் தேங்கியுள்ளது.மழை நீர் தேங்கியுள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாய நிலை உள்ளது.
தேங்கும் மழை நீரை வடிகால் அமைத்து கடத்த ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மழை நீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE