தேவகோட்டை : ''நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் அதிகாரிகள் தாராளமாய் நடந்து கொள்ள வேண்டும்,'' என தேவகோட்டையில் நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் அமைச்சர் பாஸ்கரன் பேசினார்.
தேவகோட்டையில் நடந்த விழாவிற்கு டி.ஆர்.ஓ.,லதா தலைமை வகித்தார். கோட்டாட்சியர் சுரேந்திரன் முன்னிலை வகித்தார். தாசில்தார் சேகர் வரவேற்றார். ராமசாமி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி., செந்தில்நாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் மணிபாஸ்கரன், துணை தலைவர் சரஸ்வதி, தேவகோட்டை ஒன்றிய தலைவர் பிர்லாகணேசன் பங்கேற்றனர்.
அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது, பயிர் இன்ஸ்சூரன்ஸ் நிலுவை தொகை கிடைக்க அரசிடம் பேசப்படும். முதியோர் உதவி தொகை வழங்குவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டக்கூடாது. அரசு நலத்திட்ட உதவிக்கான நிதியை வழங்க தயாராக உள்ளது. அதிகாரிகள் தான் அதை முறையாக சென்று சேர்க்க வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE