கருமத்தம்பட்டி:கிட்டாம்பாளையத்தில் நடத்த ஆதார் சிறப்பு முகாமில், ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம்பாளையம் ஊராட்சி நிர்வாகம், சோமனுார் துணை தபால்துறை சார்பில், ஆதார் சிறப்பு முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் சந்திரசேகர் முகாமை துவக்கி வைத்தார். கிட்டாம்பாளையம், வடுகபாளையம், குளத்துப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த, ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.தினமும், 100 பேர் என, டோக்கன் வழங்கப்பட்டது. புதிய ஆதார் எடுத்தல், திருத்தம், மொபைல் போன் எண் இணைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அஞ்சலக சேமிப்பு கணக்குகளையும் துவக்கி கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. போஸ்ட்மாஸ்டர்கள் பிரியதர்ஷனி, சித்ரா, பிரபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE