திருவனந்தபுரம்:கேரளா மாநிலம் கண்ணுார் மாவட்டத்தில் தேர்தல் நேரத்தில் கள்ளக் காதலனுடன் ஓடிய பெண் வேட்பாளர் ஆதிரா 26, வெறும் 38 ஓட்டுகள் பெற்றார்.
மாலுாரை சேர்ந்த தனேஷ் மனைவி ஆதிரா 26. மூன்று வயது குழந்தை உள்ளது. இருவரும் பா.ஜ., பிரமுகர்கள். தேராவூர் பஞ்சாயத்து 11வது வார்டில் தனேஷ், 12வது வார்டில் ஆதிரா போட்டியிட்டனர். ஓட்டுப்பதிவுக்கு சில நாட்களுக்கு முன் மாயமான ஆதிராவை காசர்கோட்டை சேர்ந்த இளைஞருடன் தேராவூர் போலீசார் மீட்டனர். கணவருடன் செல்ல மறுத்தவர் இளைஞருடன் சென்றார். இந்நிலையில் ஓட்டு எண்ணிக்கையில் ஆதிராவுக்கு 38 ஓட்டுகள் கிடைத்தது. வார்டில் மா.கம்யூ., வேட்பாளர் 1500க்கும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE