குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை தாலுகா பகுதியில் ஆதார் அட்டை பெற முடியால் பொது மக்கள்திணறுகின்றனர்.
ஒவ்வொருவரும் 'ஆதார்' அட்டை பெறுவதுகட்டாயமாக்கப்பட்டுள்ளது. குஜிலியம்பாறை பகுதியில் பல ஆயிரம் தொழிலாளர்கள்உள்ளனர். தற்போது, ஆதார் அட்டையில் அலைபேசி எண்ணை இணைத்தால்தான் அட்டையை புதுப்பிக்க முடிகிறது.இதற்காக குஜிலியம்பாறையில் தாலுகா, தபால் நிலையம் மற்றும்பாளையம், கோவிலுார் தபால் நிலையங்களில் ஆதார் மையம்இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
தற்போது குஜிலியம்பாறையில் மட்டும் ஆதார் பெறவும், திருத்தம் செய்ய, அலைபேசி போன் எண்ணை இணைக்க முடிகிறது.பாளையம் மற்றும் கோவிலுார் தபால் நிலையங்களில், அரசு அறிவித்த பணிசெயல்பாடற்று உள்ளது. இதனால் பொது மக்கள் திண்டுக்கல் அல்லது வேடசந்துார் செல்கின்றனர். அரசு அறிவித்தபடி, தபால் நிலையங்களில்ஆதார் அட்டை எடுக்கும் பணி துவக்கவும், குஜிலியம்பாறை தாலுகாவில் ஆதார் மையம் செயல்படவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE