வடமதுரை : 'மின்பாதை அருகில் வீடு, கடைகள் கட்டுவோர், விண்ணப்பித்து மின் பாதையை மாற்றி அமைத்த பின்னரே கட்டுமான பணியை தொடங்க வேண்டும்' என, உதவி பொறியாளர் செல்வக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: புதிதாக வீடு, கடை கட்டுவதற்கு தற்காலிக மின் இணைப்பு பெற்றுக் கொண்டு, உயர் மின் அழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் பாதைக்கு மிக அருகில் கட்டுமானப் பணி செய்யும்போது உயிரிழப்பு நேரிடுகிறது.எனவே மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து விதிமுறைகளின்படி மின் கம்பிகள் செல்லும் பாதையை மாற்றி அமைத்த பின்னரே, கட்டுமானப் பணிகளை தொடங்க வேண்டும். தவறினால் மின் விபத்து, உயிரிழப்புகளுக்கு கட்டட உரிமையாளரே முழு பொறுப்பு. மின்சார வாரியம் பொறுப்பேற்காது' என தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE