வேடசந்தூர் : குடகனாற்றில் உள்ள தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. அழகாபுரி குடகனாறு அணையிலும் 12 அடி தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இரு இடங்களிலும் அகில இந்திய சன்னியாசிகள் சங்க நிறுவனர் ராமானந்தாசுவாமிகள் தலைமையில் சாதுக்கள் தண்ணீரில் பூ தூவி வழிபாடு நடத்தினர். குடகனாறு வற்றாத ஜீவநதியாக மாறவேண்டும் என சிறப்புவழிபாடு நடத்தினர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்க இளைஞரணி தலைவர் நடராஜன் உட்பட திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE