கானத்துார்:நடிகையிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட, 'வெப் சீரிஸ்' இயக்குனரை, போலீசார் கைது செய்தனர்.
உடுமலைபேட்டையைச் சேர்ந்தவர் ரஞ்சித், 25; சினிமா இயக்குனர். சோழிங்கநல்லுாரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, 'மூன்று பேர்' என்ற வெப் சீரிஸ் இயக்கிவந்தார். இதில், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த, 22 வயது நடிகை, கதாநாயகியாக நடித்தார். இவர், பல குறும்படங்களில் நடித்துள்ளார். 'வெப் சீரிஸ்' நடித்தபோது, அந்த நடிகையும், ரஞ்சித்தும் காதலித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஞ்சித் மற்றும் இரு துணை இயக்குனர்கள், தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, கானத்துார் போலீசில், அப்பெண் புகார் அளித்தார்.போலீசார், மூன்று பேரிடமும் விசாரித்தனர். இதையடுத்து, ரஞ்சித்தை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE