சென்னை:பதிவுத்துறையின் பல்வேறு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்து வரும் நிலையில், மூன்று சார் பதிவாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், உயர் நீதிமன்ற கெடுபிடியால், லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கைகள் தீவிரமாகி உள்ளன. இதுவரை, 42 சார் பதிவாளர் அலுவலகங்கள் சிக்கியுள்ளன.இந்நிலையில், மூன்று சார் பதிவாளர்களை, நிர்வாக ரீதியாக மாற்றி, வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறை செயலர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.
யார், யார்?
* கடலுார் மாவட்டம், வடலுார் சார் பதிவாளர் பி.ரங்கராஜ், பட்டுக்கோட்டை மாவட்ட பதிவாளர் அலுவலகத்துக்கும், பண்ருட்டி சார் பதிவாளர் எஸ்.சஞ்ஜீவி சத்தியசீலன், சேத்தியாதோப்பு சார் பதிவாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்
* கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சார் பதிவாளர் தமிழரசன், நமக்கல் மாவட்டம், நாமகிரிபேட்டை சார் பதிவாளராக மாற்றப்பட்டுள்ளார்.அடுத்ததாக, லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய சார் பதிவாளர்களும் மாற்றப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE