பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, 19 வயது வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த, 19 வயது வாலிபருக்கும், பொள்ளாச்சி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த, 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வாலிபர், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த, இரண்டு வாரங்களுக்கு முன், சிறுமியை அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, சிறுமியின் பெற்றோர் பெண்ணை காணவில்லை என, தாலுகா போலீசில் புகார் கொடுத்தனர். இது குறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கேரள எல்லையில், வாலிபரை பிடித்து, சிறுமியை மீட்டனர். வாலிபர் மீது 'போக்சோ' சட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE