சென்னை:சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு, சாப்பாடு தட்டு வழங்க, 1.22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், மதிய உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு, இலவசமாக சில்வர் தட்டு வழங்குவதற்காக, நடப்பாண்டு, 1.36 லட்சம் சில்வர் தட்டுகளை வாங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 1.22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிதியில், சில்வர் தட்டுகள் வாங்குவதற்காக, சமூக நலத்துறை சார்பில், 'டெண்டர்' விடப்பட்டுள்ளது. வரும், 22ம் தேதி டெண்டர் விண்ணப்பிக்க, கடைசிநாள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE