கள்ளிமந்தையம் : பாலப்பன்பட்டி, அப்பியம்பட்டி, பொருளூர் கிராமப்பகுதிகளில் கால்நடைகளை தாக்கும் அம்மை நோயினால் இரண்டு பசு மாடுகள் இறந்தன.
கள்ளிமந்தையத்தைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் விவசாயிகள் கறவை மாடுகளை அதிகமாக வளர்க்கின்றனர். குறிப்பாக கறவை மாடுகளை விவசாயிகள் அதிகம் வளர்க்கின்றனர். விளைபொருட்கள் போலின்றி, பசும்பாலுக்கு நிரந்தர விலை கிடைப்பதால் பசுமாடுகள் அதிகம் உள்ளன.
சில நாட்களாக இப்பகுதி கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்குதல் உள்ளது. பசு மாடுகளின் கால்கள் வீக்கமடைந்து சில நாட்களில் இறந்துவிடுகின்றன. அரசு கால்நடை டாக்டர்கள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இறப்பை தடுக்கும் வழிமுறைகளை செய்ய வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர். சமீபத்தில் பாலப்பன்பட்டி மற்றும் பாலப்பன்பட்டி புதுாரில் தலா ஒரு பசு மாடு அம்மை நோய் தாக்கி இறந்துள்ளன.
விவசாயி சின்னச்சாமி கூறுகையில், ''அம்மை நோய் தாக்கி இறந்த பசுமாடு ஒவ்வொன்றும் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ளவை. இதனால் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE