பண்ணைக்காடு : தாண்டிக்குடி - பண்ணைக்காடு ரோட்டில் முகாமிட்டுள்ள ஒற்றை யானை வனத்துறைக்கு போக்குக் காட்டி வருகிறது.
கடந்த வாரம் தடியன் குடிசையிலிருந்து இடம் பெயர்ந்த யானை, கொடலங்காடு வழியாக எதிரொலிப்பாறை சென்று முகாமிட்டது. அப்பகுதி வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியது. யானையை விரட்டும் பணியில் வெடிகளை வெடித்தாலும் சீத்தாராம் ஓடை பள்ளத்தாக்கில் முகாமிட்டு இடம் பெயரவில்லை.
அவ்வப்போது ரோட்டிற்கு வருவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் ரோட்டில் செல்ல தயங்குகின்றனர். ஒற்றை யானையின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை விரைந்து செயல்பட வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE