புதுச்சேரி; கம்பன் நகர் மெயின்ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால், ஐந்து நகர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.ரெட்டியார்பாளையம் கம்பன் நகர் மெயின் ரோடு, கம்பன் நகர், மரியாள் நகர், செல்லபாப்பு நகர், வயல் வெளி நகர், தேவா நகர் உள்ளிட்ட ஐந்து நகர பகுதிகளுக்கு பிரதான சாலையாக உள்ளது. தொடர் மழை காரணமாக இந்த ரோடு குண்டும் குழியுமாக மாறி, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக வயல்வெளி நகர் வரை 2 கி.மீ., தொலைவிற்கு ஜல்லிகள் பெயர்ந்து, பள்ளம் படுகுழியாக மோசமான நிலையில் உள்ளது.இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். டூ வீலரில் செல்வோர், மழைநீர் தேங்கிய பள்ளங்களில் விழுந்து காயமடைகின்றனர்.பள்ளங்களில் மண், கற்களை கொட்டி அவ்வப்போது பேட்ச் ஒர்க் செய்தாலும், சில நாட்களில் மீண்டும் பள்ளம் ஏற்படுகிறது. படுமோசமாக உள்ள கம்பன் நகர் பிரதான சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE