திருக்கனுார்; மணலிப்பட்டு- கோரைக்கேணி இடையே ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து, சாலை மூழ்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.திருக்கனுார் அடுத்த மணலிப்பட்டு வழியாக கோரைக்கேணி, நெமிலி, தழுதாளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள், பல்வேறு பணி நிமித்தமாக தினமும் திருக்கனுார் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மணலிப்பட்டு - கோரைக்கேணி இடையே உள்ள வாய்க்கால் ஓடையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதற்கிடையே வீடூர் அணை திறக்கப்பட்டு, அப்பகுதி ஏரிகளில் இருந்து வரும் தண்ணீரும் இந்த ஓடையின் வழியாக செல்கிறது. அதனால், ஓடை தண்ணீர் பெருக்கெடுத்து, வாய்க்கால் மீதுள்ள சாலையில் இரண்டு அடி உயரத்திற்கு செல்கிறது. இதனால், மணலிப்பட்டு- கோரைக்கேணி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE