புதுச்சேரி; புதுச்சேரியில், 9 மாதங்களுக்குப்பிறகு கல்லுாரிகள் நேற்று திறக்கப்பட்டன.கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாத இறுதியில் கல்லுாரிகள் மூடப்பட்டன. தற்போது, தொற்று கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து, கல்லுாரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நேற்று துவங்கின.ஒன்பது மாதங்களுக்கு பின் கல்லுாரிகள் திறக்கப்பட்டதால், மாணவ மாணவிகள் உற்சாகமாக வந்தனர். அவர்களுக்கு சானிடைசர் வழங்கி, வரவேற்பு அளிக்கப்பட்டது. முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் வகுப்பில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE