காட்டேரிக்குப்பம்; சுத்துக்கேணி பகுதியில் பெய்த தொடர் மழையால், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.காட்டேரிக்குப்பம் அடுத்த சுத்துக்கேணி, சந்தைப்புதுக்குப்பம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், சம்பா பருவத்தில் விவசாயிகள் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்தனர். இந்த நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன.கடந்த இரு தினங்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, நெற்பயிர்கள் அனைத்தும் நிலத்தில் சாய்ந்து, மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.இதற்கிடையே, வீடூர் அணை திறக்கப்பட்டு, சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE