வில்லியனுார்; வில்லியனுார் அருகே கோவிலில் இருந்த மூலவர் சிலை திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.அரியூர் பாரதி நகரில் உள்ள பாலசுப்ரமணியன் கோவிலில், அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் பூஜைகள் முடிந்து, கோவிலை மூடிவிட்டு இரவு அங்கேயே துாங்கினார்.நேற்று காலை கோவிந்தன் கோவிலை திறந்து பார்த்தபோது, கருவறையில் இருந்த ஒன்றரை அடி உயர உற்சவர் முருகன் சிலை காணாமல் போயிருந்தது. புகாரின்பேரில் வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.அன்று இரவு கோவில் வளாகத்தில் படுத்திருந்த பாரதி நகரை சேர்ந்த கொத்தனார் ராஜா மாயமானதால், சந்தேகத்தின்பேரில் அவரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE