புதுச்சேரி; 'புதிய ரேஷன் கார்டுகள் பெறுவதில் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை போக்கி விரைவாக வழங்க வேண்டும்' என கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.ரேஷன்கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்குதல் தொடர்பாக, குடிமைப்பொருள் வழங்கல் துறையினருடன், காணொலியில் கவர்னர் கிரண்பேடி, நேற்று ஆய்வு நடத்தினார். இதில், துறை செயலர், இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில், இலவச அரிசி வழங்குவதில், துறை எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து விவா திக்கப் பட்டது.ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, இலவச அரிசியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சிரமம் உள்ளது. எனவே, உள்ளாட்சி, ஊரக மேம்பாடு, தொழிலாளர் துறை, நுாறுநாள் வேலைவாய்ப்பு திட்டம், சுய உதவிகள் குழுக்கள் வழியாக இலவச அரிசியை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டார்.இலவச அரிசியை மக்களிம் கொண்டு சேர்க்க, டன் ஒன்றுக்கு 700 ரூபாய் மத்திய அரசு தொழிலாளர் கூலியாக வழங்குகிறது என்பதை கவர்னர் சுட்டிக்காட்டினார்.புதிய ரேஷன் கார்டுகள் பெறுவதில் மக்களுக்கும் ஏற்படும் சிரமங்களை போக்கி விரைவாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE