தியாகதுருகம்; தியாகதுருகம் சுற்று வட்டார கிராமங்களில் 6,000 ஏக்கர் பரப்பளவில் மானாவாரி நிலங்களில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது காய்கள் முற்றி பஞ்சு வெளிப்படும் பருவத்தில் உள்ளது. கடந்த 20 நாட்களாக பெய்த தொடர் மழையால் காய்கள் வீணாகி உதிரத் துவங்கியது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பெய்த கன மழை காரணமாக பருத்தி வயலில் ஒரு அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சில இடங்களில் செடிகள் நீரில் மூழ்கின.இதனால் முற்றிய காய்கள் அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பஞ்சு அறுவடைத் தருணத்தில் பெய்த கனமழையால் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE