ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் அடுத்த மரூர் கிராமத்தில் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாப்பாந்தாங்கல் ஏரி, வனப்பகுதியில் பெய்யும் மழை நீரால் நிரம்பும். ஏரி நிரம்பினால், உபரி நீர் அருகில் உள்ள பெரிய ஏரிக்குச் செல்லும் வகையில் ஓடை உள்ளது.நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த மழையினால், ஓடையின் கரை உடைந்தது. இதனால், ஏரியில் இருந்த தண்ணீர் அருகில், மரூர் கிராமத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பிலான விளை நிலங்களில் புகுந்தது. இதில், கரும்பு, நெல், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.தகவலறிந்த சங்கராபுரம் தாசில்தார் நடராஜன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். தொடர்ந்து ஜே.சி.பி., இயந்திரம் மூலம் ஏரிக்கு அருகில் உள்ள வேறொரு ஓடை துார்வாரப்பட்டு, தண்ணீர் திருப்பி விடப்பட்டது. உடைந்த ஓடையில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு தற்காலிகமாக சரிசெய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE